ADDED : ஏப் 21, 2025 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார், மல்லியக்கரையை சேர்ந்த ராமசாமி மகன் பூவரசன், 24. விவசாயியான இவருக்கு, மனைவி நிவேதினி, 24, ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளனர். பால் எடுக்கும் தொழிலும் செய்து வந்த பூவரசன், நேற்று வீட்டில் இருந்தபோது, மனைவி மற்றும் தாய் தகராறு செய்துள்ளனர்.
இதில் மனமுடைந்த பூவரசன், வீடு அருகே இருந்த கிணற்றில் குதித்தார். மக்கள், பூவரசனை இறந்த நிலையில் மீட்டனர். மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

