ADDED : பிப் 10, 2025 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார், கொத்தாம்பாடியை சேர்ந்த செல்வக்குமார் மகன் கிரிதரன், 26. பைக் மெக்கானிக். நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு ஆத்துாரில் இருந்து, 'அப்பாச்சி' பைக்கில் சென்றுகொண்டிருந்தார். கொத்தாம்பாடி முனீஸ்வரன் கோவில் எதிரே சென்றபோது, பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதில் படுகாயமடைந்த கிரிதரனை, மக்கள் மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியில் உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார், விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.

