sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள் நடும் விழா

/

மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள் நடும் விழா

மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள் நடும் விழா

மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள் நடும் விழா


ADDED : டிச 18, 2024 07:12 AM

Google News

ADDED : டிச 18, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சிறு ரக தாவரவியல் பூங்கா பகுதியில், 50 வகை மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் சந்திரசேகர் தலைமை வகித்தார். பசுமை மைய செயல் தலைவரான, ஓய்வு பெற்ற மாவட்ட வன அலுவலர் மணி, நேற்று, அவரது பிறந்த நாளையொட்டி, 50 வகை மரக்கன்றுகளை நட்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், 'அத்தி, ஆச்சான், நறுவிலி, எழிலைபாலை, இயல்வாகை, மகாகனி, கடம்பை, அரசு, கருமருது, நொச்சி, கூந்தல் பனை உள்பட 50 வகை மரக்கன்றுகளை பிறந்த நாளில் நட்டது மகிழ்ச்சி. இந்த மரங்களின் நன்மை, அதன் மருத்துவ குணங்கள் அறிந்து கொள்ளவும், மரம் நடவை ஊக்கப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மரங்கள் உதவும்,'' என்றார்.

தொடர்ந்து, தலைமை ஆசிரியர் சந்திரசேகர் பேசுகையில், ''நாட்டில் முதல்முறை, ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தான், மூலிகை தோட்டம், நட்சத்திர தோட்டம், மாணவர்கள் பிறந்த நாள் தோட்டம் அமைத்து பராமரிக்கப்படுகிறது,'' என்றார்.தமிழக மாநில விவசாயிகள் சங்க, மாநில செயலர் ராமசாமி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us