தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தானியங்களை காக்க வழிமுறை

தானியங்களை காக்க வழிமுறை

தானியங்களை காக்க வழிமுறை


ADDED : ஆக 25, 2025 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2025 03:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வீரபாண்டி: வீரபாண்டி வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகாயினி அறிக்கை: உளுந்து, பச்சைப்பயிறு, துவரை, தட்டைப்பயிறு வகைகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவி பின் சேமித்து வைப்-பதால் பூச்சிகளால் பயறுகள் வீணாவதை தடுக்கலாம். எண்ணெய் தடவ, ஒரு கிலோ பயறுக்கு, 50 மி.லி., தேங்காய் எண்ணெய் தேவைப்படுகிறது.

பயறுகளின் மீது எண்ணெய் தடவி குறைந்தது, 5 மணி நேரம் சூரிய ஒளியில் நன்றாக உலர்த்திய பின் சேமித்து வைக்க வேண்டும். இப்படி சேமிக்கும்போது, பயறு வகை தானியங்-களை, 3 மாதங்களுக்கு ஒருமுறை வெயிலில் நன்றாக உலர்த்த வேண்டும். இம்முறையில் பயறு வகை தானியங்களை, 6 முதல், 8 மாதங்கள் வரை, பூச்சிகள் பாதிப்பின்றி சேமித்து வைக்க முடிகி-றது.திரிவை கல்லில் இரண்டாக உடைத்து புடைக்கும்பொழுது உடைக்கப்பட்ட தானியங்களில் இருந்து தோல்கள், துாசிகள், கற்கள் போன்றவை நீக்கப்பட்டு சேமித்து வைக்கப்படுகின்றன. உடைக்கப்பட்ட தானியங்களை துளைப்பான்கள் தாக்குவ-தில்லை. தானியங்களை உடைத்து சேமிப்பதன் மூலம் துளைப்பான் வகை வண்டுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us