sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏத்தாப்பூர் முருகன் கோவிலில் அமைச்சர் முத்துசாமி வழிபாடு

/

ஏத்தாப்பூர் முருகன் கோவிலில் அமைச்சர் முத்துசாமி வழிபாடு

ஏத்தாப்பூர் முருகன் கோவிலில் அமைச்சர் முத்துசாமி வழிபாடு

ஏத்தாப்பூர் முருகன் கோவிலில் அமைச்சர் முத்துசாமி வழிபாடு


ADDED : ஆக 23, 2025 02:05 AM

Google News

ADDED : ஆக 23, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார் :அமாவாசையை ஒட்டி, சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலுக்கு நேற்று மாலை, 6:50 மணிக்கு, தி.மு.க.,வை சேர்ந்த, தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்து சாமி வந்தார். இரவு, 7:00 மணிக்கு, மூலவர் முத்துமலை முருகனை வழிபட்டு, 146 அடி உயர முருகன் சிலை பாதத்தை தொட்டு வணங்கினார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில், அமைச்சர் முத்துசாமிக்கு மாலை அணிவித்து, பூஜை செய்து பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''ஈரோடு, திண்டலில் உள்ள வேலாயுதசுவாமி கோவிலில், முருகன் சிலை, ராஜகோபுர கட்டுமான பணி மேற்கொள்ள, அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது. 207 அடி உயரத்தில், மிகப்பெரிய முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிக்கு முன், ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கட்டுமானப்பணி குறித்து பார்வையிட வந்தேன்,'' என்றார்.






      Dinamalar
      Follow us