தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாயமான சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

மாயமான சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

மாயமான சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு


ADDED : மார் 22, 2026 08:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 08:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:சேலம், ஜாகீர் அம்மாபாளையம், சின்ன அம்மா பாளையத்தை சேர்ந்தவர் முனுசாமி, 45. இவரது மனைவி, சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.

இவர்களது மகன் கிேஷார், 6. அத்துடன், 3 பெண்குழந்தைகள் உள்ளனர். அனைவரும் ஜட்ஜ் சாலையில் உள்ள ஆசிரமத்தில் தங்கி படித்து வந்தனர்.

இந்நிலையில், 1ம் வகுப்பு மாணவரான கிேஷார் சரியாக படிக்காததால் இரு மாதங்

களுக்கு முன், வீட்டுக்கு வந்து முனுசாமியுடன் இருந்தார். அடிக்-கடி பக்கத்தில் உள்ள பெரியம்மா துர்கா வீட்டுக்கு, சிறுவன் சென்று வந்தான். நேற்று முன்தினம் முதல், அவனை காண-வில்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பன், பக்கத்தில் உள்ள கோபால் கிணற்றில் மீன் பிடிக்க சென்றபோது கிேஷார் தவறி விழுந்ததாக தெரிவித்தான்.

இதுகுறித்து தகவல் கிடைக்க, நேற்று இரவு, 8:30 மணிக்கு சூரமங்கலம் தீயணைப்பு துறையினர், அங்கு சென்று, 2 மணி நேரதேடுதலுக்கு பின், கிேஷார் சடலத்தை மீட்டனர். சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us