sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாலை பணி குறித்து பதில் அளிக்க மறுப்பு வனத்துறை மீது எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

/

சாலை பணி குறித்து பதில் அளிக்க மறுப்பு வனத்துறை மீது எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

சாலை பணி குறித்து பதில் அளிக்க மறுப்பு வனத்துறை மீது எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

சாலை பணி குறித்து பதில் அளிக்க மறுப்பு வனத்துறை மீது எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு


ADDED : மே 01, 2024 01:41 PM

Google News

ADDED : மே 01, 2024 01:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: வனத்துறை மூலம் அமைக்கப்படும் சாலையை, எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய குழு அமைத்து, கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்ய வேண்டும்.

இதுகுறித்து நரசிங்கபுரத்தில் நேற்று, அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் தொகுதி, எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், நிருபர்களிடம் கூறியதாவது:

சேலம், ஆத்துார் மாவட்ட வனக்கோட்டங்களில் ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் உள்ள மலை கிராமங்களுக்கு தற்போது, 10 கோடி ரூபாயில், பாலம் வசதியுடன் தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. இதுகுறித்து வன அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்க மறுக்கின்றனர். சாலை எந்த இடத்தில் போடுகின்றனர் என்ற விபரம் தெரிவிப்பதில்லை. ஒப்பந்ததாரர்கள், அமைச்சர்களுக்கு, 40 சதவீத கமிஷன் கொடுத்து பணி மேற்கொள்வதாக கூறுகின்றனர்.

அதனால் வனத்துறை மூலம் அமைக்கப்படும் சாலையை, எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய குழு அமைத்து, கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்ய வேண்டும். இல்லை எனில் மாவட்ட வன அலுவலகங்கள் முன், போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us