ADDED : ஜன 19, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2 கடைகளில் பணம் திருட்டு
ஆத்துார்: ஆத்துார் அருகே மல்லியக்கரை, கோபால புரத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 50. இவரது வணிக வளாக கட்டடத்தில், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், 26, மளிகை கடையும், செங்கதிர், 24, என்பவர் மெடிக்கலும் வைத்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு, கடைகளை பூட்டிச்சென்றனர். நேற்று காலை, கடைகளின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததால் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, மளிகை கடையில், 20,000 ரூபாய், மொபைல் போன், மெடிக்கலில், 5,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. இருவரும் அளித்த புகார்படி, மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.