sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய தாய் உடந்தை: ஆத்தூர் அருகே நடந்த கொடூரம்

/

14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய தாய் உடந்தை: ஆத்தூர் அருகே நடந்த கொடூரம்

14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய தாய் உடந்தை: ஆத்தூர் அருகே நடந்த கொடூரம்

14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய தாய் உடந்தை: ஆத்தூர் அருகே நடந்த கொடூரம்

12


UPDATED : மார் 06, 2025 09:48 PM

ADDED : மார் 06, 2025 07:06 PM

Google News

UPDATED : மார் 06, 2025 09:48 PM ADDED : மார் 06, 2025 07:06 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்தூர்: தாய் கண் முன்னே சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவரும், இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயாரும் 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்துார் பகுதியைச் சேர்ந்தவர், 14 வயது சிறுமி. இவர், அரசு பள்ளி ஒன்றில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த, லாரி டிரைவர் குமரேசன், 50, என்பவர், தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து மாணவி, தனது வகுப்பு ஆசிரியையிடம், தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து கூறியுள்ளார். இதைக் கேட்டு மாணவியின் தந்தையை வரவழைத்த ஆசிரியை, சிறுமிக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை, குழந்தைகள் உதவி மையத்தில் புகார் கூறினார். அதனடிப்படையில், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார், விசாரணையை துவங்கினர்.

இந்த விசாரணையில், லாரி டிரைவர் குமரேசனுக்கு, சிறுமியின் தாயாருடன் பழக்கம் இருந்துள்ளது. கடந்த, பிப்., 17ம் தேதி, வீட்டில் இருந்த சிறுமியை கட்டாயப்படுத்தி குமரேசன் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். பிப்., 20 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில், சிறுமியை மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு சிறுமியின் தாயாரும், டிரைவர் குமரேசனுக்கு உடந்தையாக இருந்துள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆத்தூர் மகளிர் போலீசார், சிறுமியை பலாத்காரம் செய்த, லாரி டிரைவர் குமரேசன், 50, சிறுமியின் தாயார் ஆகியோர் மீது, 'போக்சோ' மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us