sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாற்றுத்திறனாளி கொலை: பள்ளி மாணவர் கைது

/

மாற்றுத்திறனாளி கொலை: பள்ளி மாணவர் கைது

மாற்றுத்திறனாளி கொலை: பள்ளி மாணவர் கைது

மாற்றுத்திறனாளி கொலை: பள்ளி மாணவர் கைது


ADDED : பிப் 15, 2024 10:33 AM

Google News

ADDED : பிப் 15, 2024 10:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி,: மாற்றுத்திறனாளி பெண்ணை கொன்ற பள்ளி மாணவரை, போலீசார் கைது செய்தனர்.

இடைப்பாடி அருகே குருக்கப்பட்டியை சேர்ந்தவர் பெருமாயி, 50. இவரது கணவர் மாணிக்கம், 10 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது ஒரே மகளுக்கு திருமணமாகி வேறு ஊரில் வசிக்கிறார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான பெருமாயி, தனியே வசித்தார். கடந்த, 12ல் தலையில் கல்லை போட்டு பெருமாயி கொலை செய்யப்பட்டார். பூலாம்பட்டி போலீசார் விசாரித்து, அதே பகுதியை சேர்ந்த, 17 வயது பள்ளி மாணவரை நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

கடந்த, 11 இரவு, 11:30 மணிக்கு, பெருமாயி வீட்டில் இருந்தபோது, அவரிடம் தண்ணீர் வாங்கி, பிளஸ் 2 மாணவர் குடித்துள்ளார். பின் பெருமாயியுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என கேட்டுள்ளார். பெருமாயி மறுத்து, இதுகுறித்து எல்லோரிடமும் சொல்கிறேன் என கூறியுள்ளார். இதில் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாணவர், கையால் பெருமாயி முகத்தில் தாக்கியுள்ளார். மேலும் இது வெளியே தெரிந்தால் அவமானம் என எண்ணிய மாணவர், கல்லை துாக்கி தலையில் போட்டு பெருமாயியை கொன்றுள்ளார். மாணவர், ஜலகண்டாபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில், பிளஸ் 2 படித்த நிலையில், ஒரு மாதமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். விசாரணையில் கொலை செய்ததை மாணவர் ஒப்புக்கொண்டதால் கைது செய்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us