ADDED : ஜூலை 07, 2025 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம், செம்மண் கூடலை சேர்ந்தவர் சேட்டு, 50. மன-நலம் பாதிக்கப்பட்டவரான இவர், காட்டிலுள்ள செடி, கொடி-களை, மூலிகையாக காய்ச்சி குடித்து வந்தார். கடந்த, 4ல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. நேற்று முன்தினம், அய்யனாரப்பன் கோவில் அருகே, அவர் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து, அவரது மனைவி முனியம்மாள் அளித்த புகாரில், 'கொடிகளை மூலிகை என காய்ச்சி குடித்ததில் கணவர் இறந்தி-ருக்கலாம்' என கூறியிருந்தார். தாரமங்கலம் போலீசார் விசாரிக்-கின்றனர்.