sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நவராத்திரி உற்சவம் இன்று தொடக்கம்

/

நவராத்திரி உற்சவம் இன்று தொடக்கம்

நவராத்திரி உற்சவம் இன்று தொடக்கம்

நவராத்திரி உற்சவம் இன்று தொடக்கம்


ADDED : அக் 03, 2024 06:43 AM

Google News

ADDED : அக் 03, 2024 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா இன்று தொடங்குகிறது. வரும், 13ல் முடிய உள்ள விழாவில் உற்வசமூர்த்தியான அம்மனுக்கு, காலை, 10:30 மணிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், ஆராதனை நடக்கிறது. பின் நவராத்திரி தொடங்கி, மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜை, தொடர்ந்து தங்க ரத புறப்பாடு நடக்கிறது. பின் அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாட்டை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி உள்ளிட்ட அறங்காவலர்கள் மேற்கொள்கின்றனர்.

நவராத்திரியை முன்னிட்டு சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள அய்யப்ப பஜனை மண்டலி சார்பில் அதன் தர்மசாஸ்தா ஆசிரம வளாகத்தில் இன்று முதல் வரும், 12 வரை கொலு வைத்து காலை, மாலையில் சிறப்பு பூஜை நடக்க உள்ளது. இதில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

விழா தொடக்கம்

சங்ககிரி வாசவி டிரஸ்ட், வாசவி மகிளா சபா சார்பில் அங்குள்ள வாசவி மஹாலில் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நேற்று நடந்தன. கலசங்களை வைத்து வேள்வி பூஜைகளுடன் கொலு பொம்மைகளை வைத்து மகளிர் குழுவினர் பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர். இன்று முதல், வரும், 11 வரை நவராத்தி விழா நடக்கிறது. தினமும் மதியம், 12:00 முதல், 2:00 மணி; இரவு, 8:00 முதல், 10:00 மணி வரை சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.ஆத்துார், கோட்டை சம்போடை வன மதுரகாளியம்மன் கோவிலில், நவராத்திரி முதல் நாளையொட்டி சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. 200க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் வைத்து மகிஷாசூரமர்த்தினி அலங்கார அம்மனுடன் பூஜை செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us