/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின்சாரம் தாக்கி நேபாள இளைஞர் பரிதாப பலி
/
மின்சாரம் தாக்கி நேபாள இளைஞர் பரிதாப பலி
ADDED : அக் 15, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: நேபாள நாட்டை சேர்ந்தவர் ரோகித் சவுத்ரி, 20, இவரது தம்பி சுமித் சவுத்ரி, 19. இருவரும், தாரமங்கலம் பவளத்தானுார் அருகேயுள்ள, ஆவின் பாலகத்தில் கடந்த நான்கு மாதங்களாக வேலை செய்கின்றனர்.
இதில் சுமித் சவுத்ரி நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு ஆவினில் பணி முடித்து விட்டு, ஸ்டோர் அறையை மூட சென்றார். அப்போது அருகிலிருந்த கிரைண்டரை தொட்டபோது, மின்சாரம் தாக்கி மயங்கினார். அங்கிருந்த மக்கள் அவரை மீட்டு, தாரமங்கலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே சுமித் சவுத்ரி இறந்ததாக தெரிவித்தார்.தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.