sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'தி.மு.க., கூட்டணி கட்சியினர் யாரும் ஆட்சியில் பங்கு குறித்து பேசவில்லை'

/

'தி.மு.க., கூட்டணி கட்சியினர் யாரும் ஆட்சியில் பங்கு குறித்து பேசவில்லை'

'தி.மு.க., கூட்டணி கட்சியினர் யாரும் ஆட்சியில் பங்கு குறித்து பேசவில்லை'

'தி.மு.க., கூட்டணி கட்சியினர் யாரும் ஆட்சியில் பங்கு குறித்து பேசவில்லை'


ADDED : ஆக 18, 2025 03:27 AM

Google News

ADDED : ஆக 18, 2025 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், புது ரோட்டில் செயல்படும் தனியார் மின்னணு நிறு-வனம் மூடப்பட்டதை கண்டித்து, அதன் தொழிலாளர்கள், இரு வாரங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

அவர்களை, த.வா.க., தலைவர் வேல்முருகன் நேற்று சந்தித்து, ஆதரவை தெரிவித்தார்.தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: தொழிற்சாலையை தொடர்ந்து நடத்தக்கோரி, முதல்வரிடம் மனு வழங்கியுள்ளோம். ஆலையை மூட அரசு அனுமதிக்கவில்லை. 1,000 குடும்பங்களை தவிக்க விட்டு, கதவடைப்பு செய்துள்ளதை அனுமதிக்க மாட்டோம். ஆலை மூடுவதை கைவிடாவிட்டால், எங்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

தி.மு.க., கூட்டணி கட்சியினர் யாரும், கூட்டணி குறித்தோ, ஆட்சியில் பங்கு குறித்தோ பேசவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு தான் இட ஒதுக்கீடுக்கான தீர்வு. விரைவில், மத்திய, மாநில அரசுகள், ஜாதிவாரி கணக்கெ-டுப்பு நடத்த வேண்டும். ஒன்றரை கோடி வட மாநிலத்தவர்கள், தற்போது தமிழகத்தில் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு ஓட்-டுரிமை வழங்கினால், தமிழக அரசியல் சூழல் மாறும். அதை செய்ய விடமாட்டோம். அதேநேரம் இங்கு காலம் காலமாக வாழ்ந்து வருவோரின் ஓட்டுரிமையை பறிக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

பா.ம.க., மீது

பழைய 'பாசம்'

பா.ம.க., குறித்து, வேல்முருகனிடம் நிருபர்கள் கேட்டபோது, ''பொதுக்குழு குறித்து எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. தந்தை, மகன் இடையே உள்ள பிரச்னையை அவர்களே பேசி தீர்த்துக்கொள்வர். நான் அங்கிருந்து வெளியே வந்து, தனி கட்சி தொடங்கி நடத்துகிறேன். பா.ம.க., என் பழைய வீடு. அந்த வீட்டை, குறை கூற மாட்டேன்,'' என்றார்.






      Dinamalar
      Follow us