sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'புது பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமித்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும்'

/

'புது பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமித்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும்'

'புது பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமித்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும்'

'புது பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமித்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும்'


ADDED : நவ 13, 2024 03:39 AM

Google News

ADDED : நவ 13, 2024 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் புது பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத் சிங் உள்ளிட்ட அதிகாரிகள், போலீசார் உதவியுடன் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கடை வைத்துள்ளவர்கள், அவர்களுக்கு ஒதுக்கிய அளவை விட, நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்கள் வைத்திருந்தனர். இதனால் அந்த பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அனுமதியின்றி பயன்படுத்திய காஸ் சிலிண்டர், பிளாஸ்டிக் பை, டம்ளர் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டு, இரு லாரிகளில் ஏற்றிச்சென்றனர்.

இதுகுறித்து ரஞ்ஜீத்சிங் கூறியதாவது:

புது பஸ் ஸ்டாண்டில், 150 கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் உரிமம் வழங்கப்பட்டு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஆக்கிரமிப்பு செய்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் நடைபாதையை பயன்படுத்தினால் கடை உரிமம் ரத்து செய்யப்படும். இரவில் ஆதரவற்றோர் உள்பட பலர் படுத்து உறங்குகின்றனர். அதை தடுக்க, 3 காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆதரவற்ற முதியவர்களை இல்லங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us