/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கல்லால் மண்டையை உடைத்த முதியவர் கைது
/
கல்லால் மண்டையை உடைத்த முதியவர் கைது
ADDED : அக் 19, 2024 01:11 AM
கல்லால் மண்டையை
உடைத்த முதியவர் கைது
வாழப்பாடி, அக். 19-
வாழப்பாடி அடுத்த, பேளூர் இந்திரா நகரை சேர்ந்தவர் தேவன், 50. இவர், வாழப்பாடி அடுத்த புதுப்பாளையம் பகுதியில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள நிழற்கூடத்தில், நேற்று முன்தினம் இரவு துாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையத்தை சேர்ந்த தனபால், 61, என்பவர் வழக்கமாக இது நான் துாங்கும் இடம் என கூறி தகராறில்
ஈடுபட்டுள்ளார்.
அப்போது, தனபால் அருகில் இருந்த கல்லை எடுத்து, தேவன் மீது தலையில் போட்டு மண்டையை உடைத்துள்ளார். படுகாயமடைந்த தேவன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து, நேற்று வி.ஏ.ஓ., அண்ணாமலை புகார்படி, வாழப்பாடி போலீசார் வழக்கு பதிந்து, தனபாலை கைது செய்து
விசாரிக்கின்றனர்.

