sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

500 சிறப்பு பஸ்கள் இயக்கம் பட்டாசு கொண்டு செல்ல தடை

/

500 சிறப்பு பஸ்கள் இயக்கம் பட்டாசு கொண்டு செல்ல தடை

500 சிறப்பு பஸ்கள் இயக்கம் பட்டாசு கொண்டு செல்ல தடை

500 சிறப்பு பஸ்கள் இயக்கம் பட்டாசு கொண்டு செல்ல தடை


ADDED : அக் 28, 2024 04:39 AM

Google News

ADDED : அக் 28, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: வரும், 31ல் தீபாவளியை முன்னிட்டு சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இன்று முதல், நவ., 4 வரை, 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. அதேபோல் புற-நகர் வழித்தட பஸ்கள் மூலம் கூடுதல் நடைகளும் இயக்கப்படு-கின்றன. இந்த மாவட்டங்களில் இருந்து நகர பகுதிகளிலும் நாளை முதல், 4 வரை, பயணியர் கூட்டத்துக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும்.அதேபோல் சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், தர்மபுரி, ஓசூர், மேட்டூர்; சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்-பரம், காஞ்சிபுரம், பெங்களூரு; ஓசூரில் இருந்து சேலம், சென்னை, புதுவை, கடலுார், திருச்சி, மதுரை, திருப்பூர், கோவை; பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோடு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

நாமக்கல்லில் இருந்து சென்னை; ஈரோட்டில் இருந்து பெங்க-ளூரு; திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு; திருச்சியில் இருந்து ஓசூர்; மதுரையில் இருந்து ஓசூர் உள்ளிட்ட பகுதிக-ளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவ-ரத்து கழக முன்பதிவு மையம், www.tnstc.in என்ற இணையதளம் வழியே முன்பதிவு செய்யப்படுவதால், பயணியர், கூட்ட நெரி-சலை தவிர்த்து பயணிக்க, நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறப்பு பஸ் இயக்கம் முடியும் வரை, அனைத்து முக்-கிய பஸ் ஸ்டாண்டுகளில் போக்குவரத்தை கண்காணிக்க, சீர்ப-டுத்த, அலுவலர்களுக்கு, 24 மணி நேர பணி ஒதுக்கீடு செய்யப்-பட்டுள்ளது. பயணியர், பஸ்களில் பட்டாசு கொண்டு செல்ல அனுமதி இல்லை. இதை கண்காணிக்க பஸ் ஸ்டாண்டுகளில் நேர கண்காணிப்பாளர், பயணச்சீட்டு பரிசோதகர், கண்டக்டர், பஸ்களில் பயணிப்போரின் உடைமைகளை கண்காணிக்க உத்தர-விடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us