/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி தி.மு.க.,வில் இணைந்தார்
/
ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி தி.மு.க.,வில் இணைந்தார்
ADDED : மார் 03, 2026 04:31 AM
மேட்டூர்: ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
கொளத்துார் ஒன்றியம், பண்ணவாடி ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜ்குமார், 53. அ.தி.மு.க., கொளத்துார் ஒன்றிய செய-லாளராக இருந்த ராஜ்குமார், பின்பு ஓ.பி.எஸ்., அணியில் இணைந்து அக்கட்சியின் கொளத்துார் ஒன்றிய செயலாளராக இருந்தார். இரு நாட்களுக்கு முன்பு ஓ.பி.எஸ்., திடீரென ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தார்.
அதனை தொடர்ந்து நேற்று மதியம் மேட்டூர் அரசு மருத்துவ-மனை முன், ராஜ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள், மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தார். தி.மு.க., கொளத்துார் ஒன்றிய செய-லாளர் மிதுன்சக்கரவர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

