ADDED : மார் 03, 2026 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் கருப்பூர் அருகே தட்டான்சாவடியில், திவாகர் என்பவர் புதிய கட்டடம் கட்டியுள்ளார். அங்கு பெயின்டிங் பணி நடந்து வருகிறது. அன்னதானப்பட்டியை சேர்ந்த செல்லதுரை, 39, என்பவர் கடந்த 24ல், கயிறு கட்டி பெயின்ட் அடித்து கொண்டிருந்த போது, தவறி கீழே விழுந்தார். இதில், படுகாயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது அக்கா ஜான்சி அளித்த புகார் அடிப்படையில், கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

