ADDED : மார் 03, 2026 04:29 AM
ஓமலுார்: ஓமலுார் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட, சிக்கம்பட்டி ஊராட்-சியில் இரு பணித்தள பொறுப்பாளர்கள் பணியில் உள்ளனர். அதில் கோமதி, 46, என்பவரை நேற்று முன்தினம் முதல் பணிக்கு வர வேண்டாம் எனவும், ஆவணங்களை அலுவல-கத்தில் ஒப்படைக்க வேண்டும் என, ஊராட்சி செயலரான அம்-மாசி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை, 30க்கும் மேற்பட்ட தேசிய ஊரக திட்ட தொழிலாளர்கள் ஊராட்சி அலுவலகத்தில் இருந்த செய-லரை முற்றுகையிட்டு, ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்-டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: பணித்தள பொறுப்-பாளராக கடந்த, 11 ஆண்டுகளாக கோமதி இருந்து வந்துள்ளார். தற்போது ஏன் நீக்கப்பட்டார் என்ற விபரத்தை எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும். மீண்டும் அவரை பணியில் சேர்க்க வேண்டும். இவ்வாறு கூறினர்.இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறு-கையில்,'பணியின் போது பொதுமக்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கோமதி மீது குற்றச்சாட்டு எழுந்தது,' என்றனர்.

