/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓய்வூதியர் நல அமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியர் நல அமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 12, 2025 08:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: தமிழ்நாடு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்து ஓய்வூ-தியர் நல அமைப்பு சார்பில், ஆத்துார் நகராட்சி அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தலைவர் கலைமணி தலைமை வகித்தார்.
அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; ஓய்வூ-தியர் இறந்தால் குடும்ப ஓய்வூதியர்களுக்கு, 50,000 ரூபாய் இறப்பு கால நிதி வழங்குதல்; மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைத்தல் உள்பட, 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாநில செயலர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

