/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாலத்தின் கீழ் இருளால் வழிப்பறி அச்சத்தில் மக்கள்
/
பாலத்தின் கீழ் இருளால் வழிப்பறி அச்சத்தில் மக்கள்
ADDED : நவ 03, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி:சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், பனமரத்துப்பட்டி பிரிவு பாலம் உள்ளது. அதன் கிழக்கு பகுதியில் உயர் மின் கோபுரம் உள்ளது. அதன் வெளிச்சம், பாலத்தின் மீது உள்ள தார்ச்சாலையில் அடிக்கிறது.
பாலத்தின் அடியிலும், மேற்கு பகுதியிலும் இருள் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சப்படுகின்றனர். வழிப்பறி சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், பாலத்தின் அடியில் உள்ள தார்ச்சாலையில் மின்விளக்கு பொருத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

