sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தானாக திறந்த ஆனைமடுவு மதகு வெள்ளப்பெருக்கால் மக்கள் அதிர்ச்சி

/

தானாக திறந்த ஆனைமடுவு மதகு வெள்ளப்பெருக்கால் மக்கள் அதிர்ச்சி

தானாக திறந்த ஆனைமடுவு மதகு வெள்ளப்பெருக்கால் மக்கள் அதிர்ச்சி

தானாக திறந்த ஆனைமடுவு மதகு வெள்ளப்பெருக்கால் மக்கள் அதிர்ச்சி


ADDED : ஜன 23, 2025 01:21 AM

Google News

ADDED : ஜன 23, 2025 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி:ஆனைமடுவு அணையின் தலைமை மதகு தானாக திறந்து தண்ணீர் வெளியேறி, வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டையில், 67.25 அடி உயரத்தில் ஆனைமடுவு அணை உள்ளது. அங்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணை நிரம்பி இருந்தது.

மதியம், 1:30 மணிக்கு, அணையின் தலைமை மதகு வழியே, அதிகளவில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதனால் வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அப்பகுதி கரையோர மக்கள், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஷட்டர் உடையும் நிலையில் உள்ளதாக தகவல் பரவியது. இதனால் கரையோர மக்கள், விவசாயிகள் உடனடியாக, நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அப்போது தான், தலைமை மதகின் ஷட்டர், தானாக திறந்து தண்ணீர் வெளியேறியது தெரிந்தது. இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள், 1 மணி நேரத்தில், ஷட்டரை சீரமைத்து, நீர் வெளியேறுவதை நிறுத்தினர்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'எலக்ட்ரிக் சர்க்யூட் பழுதால், ஷட்டர் தானாக திறந்துள்ளது. சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டது' என்றனர்.






      Dinamalar
      Follow us