sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

/

குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்


ADDED : ஜூலை 01, 2025 01:31 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், முறையாக குடிநீர் வழங்க கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காடையாம்பட்டி தாலுகா, செம்மாண்டப்பட்டி அருகே, பாலிகாடு காலனி உள்ளது. 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக, மேட்டூர் குடிநீர் முறையாக வினியோகிக்கப்படவில்லை. கடந்த சில நாட்களாக, பராமரிப்பு பணிக்காக குடிநீர் வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

இதே போல், கழிவறை கட்டடத்துக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை என கூறி நேற்று காலை, 8:30 மணிக்கு பாதிக்கப்பட்ட மக்கள், சின்ன திருப்பதி செல்லும் ரோட்டில், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓமலுார் போலீசார், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். பின், அவர்கள் கலைந்து சென்றனர். அப்பகுதியில், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us