/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடிநீர் பிரச்னையால் மக்கள் சாலை மறியல்
/
குடிநீர் பிரச்னையால் மக்கள் சாலை மறியல்
ADDED : நவ 22, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி: -அ.புதுாரில் உள்ள ஒன்பது வார்டுகளில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், நேற்று காலை, 10:00 மணிக்கு அ.புதுார் -ஊராட்சி அலுவலகம் அருகே, அ.புதுார் - -ஒண்டிப்பினை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மகுடஞ்சாவடி போலீசார் பேச்சு நடத்தி, ஒரு மணி நேர மறியலை கைவிடச்செய்தனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.