ADDED : மே 07, 2026 02:30 AM

சேலம்: சேலம், அஸ்தம்பட்டி மகா மாரியம்மன், பிடாரி அம்மன், விநா-யகர் கோவில்களின் சித்திரை திருவிழா கடந்த ஏப்., 21ல் பூச்சாட்-டுதலுடன் தொடங்கியது. நேற்று ஏராளமான பக்தர்கள் குடும்பத்-துடன் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், காவடி அலகுகளை உடல் மற்றும் வாயில் குத்திக்கொண்டு, அந்-தரத்தில் பறந்தபடி ஊர்வலமாக வந்து வேண்டுதலை நிறைவேற்-றினர். மாலையில் அக்னி கரகம், பூங்கரகம் ஆகியவற்றை தலையில் சுமந்து, ஆடியபடி ஊர்வலமாக வந்து, பக்தர்கள் அம்-மனை தரிசித்தனர். இன்று மாறுவேட ஊர்வலம், கலை நிகழ்ச்சி, நாளை இரவு சப்தாபரண ஊர்வலம், 9ல் மஞ்சள் நீராட்டு வைபவம், ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
சந்திரபிரபை வாகனம்சங்ககிரி மலை மீதுள்ள சென்ன
கேசவ பெருமாள் கோவில் திருவிழாவை ஒட்டி நேற்று பெருமாள் உற்சவமூர்த்தி கிருஷ்ணன் அலங்காரத்தில் சந்திரபி-ரபை வாகனத்தில் சங்ககிரி நகர் பகுதிகளில் திருவீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
