ADDED : டிச 26, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலிபர் மீது போக்சோ வழக்கு
ஈரோடு, டிச. 26-
சேலம், எருப்பாளியை சேர்ந்த அய்யாதுரை மகன் பிரகாஷ், 23. பெருந்துறையை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி, சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இதுபற்றி ஈரோடு மாவட்ட சிறுவர் நல குழுவுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அளித்த புகார்படி, பெருந்துறை அனைத்து மகளிர் போலீசார், பிரகாஷ் மீது குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.