ADDED : பிப் 20, 2026 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் நகராட்சி, 19வது வார்டு, ராமலிங்க வள்ளலார் தெருவில், சேதமடைந்த தொட்டிக்கு பதில், 10,000 லிட்டர் கொள்ளளவில் புது மேல்-நிலை தொட்டி அமைக்க, கள்ளக்குறிச்சி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 16.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. தி.மு.க.,வின் ராஜ்ய-சபா எம்.பி., சிவலிங்கம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன், மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம், நக-ராட்சி தலைவி நிர்மலாபபிதா, நகர செயலர்கள் பாலசுப்ரமணியம், ராமச்சந்திரன், ஒன்றிய செயலர்கள் செழியன், வரதராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

