sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோரிக்கை அட்டை அணிந்து அஞ்சல் ஊழியர்கள் பணி

/

கோரிக்கை அட்டை அணிந்து அஞ்சல் ஊழியர்கள் பணி

கோரிக்கை அட்டை அணிந்து அஞ்சல் ஊழியர்கள் பணி

கோரிக்கை அட்டை அணிந்து அஞ்சல் ஊழியர்கள் பணி


ADDED : ஆக 14, 2025 02:35 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில், கோரிக்கை அட்டை அணிந்து நேற்று பணி செய்தனர்.

அஞ்சல் துறையில் தேசிய அளவில், 'ஏ.பி.டி-2.0' என்ற சாப்ட்வேரை புகுத்தி, அனைத்து அஞ்சலகங்களுடனும் இணைத்துள்ளனர். பெரும்பாலான அஞ்சலகங்களில் உள்ள கணினிகள், மிகவும் பழையவை. புதிய மென்பொருளை ஏற்கும் திறன் இல்லை. அல்லது சர்வருடன் இணைந்து செயல்பட இயலாமல் உள்ளன. இதனால் கடந்த, 4 முதல் அஞ்சலகங்களில் பதிவுத்தபால், ஸ்பீடு போஸ்ட், பணம் செலுத்துதல், பெறுதல் உட்பட பல்வேறு பணிகள் தடைபட்டும், விரைவாக செயல்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் மக்களுக்கு தரமான சேவை வழங்க, கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி, விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாப்ட்வேர், சர்வர் பிரச்னையால் ஏற்படுத்தும் தாமதத்துக்காக, பணியாளர்களை இரவு வெகுநேரம் காத்திருக்க வைத்து அனுப்பக்கூடாது என்பது போன்ற கோரிக்கையை வலியுறுத்தினர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலைமை, துணை, கிளை அஞ்சலகங்களில், 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர்.






      Dinamalar
      Follow us