/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எலக்ட்ரீஷியனை கத்தியால் குத்தியவருக்கு 'காப்பு'
/
எலக்ட்ரீஷியனை கத்தியால் குத்தியவருக்கு 'காப்பு'
ADDED : அக் 14, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் தாதகாபட்டி தாகூர் பகுதியை சேர்ந்தவர் ராமு மகன் சீனிவாசன், 28. எலக்ட்ரீஷியன். இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் நடந்து சென்றார். அப்போது தாகூர் பகுதியை சேர்ந்த சரவணன், 59, என்பவர் மது போதையில் தகாத வார்த்தையில் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் சீனிவாசன் ஒன்றும் சொல்லாமல் புறப்பட்டு சென்றார். அப்போது சரணவன் பின்தொடர்ந்து வந்து, கத்தியால் சீனிவாசன் வயிற்றில் குத்தினார். அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, கத்தியால் குத்திய சரவணனை நேற்று கைது செய்தனர்.