sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பிரதமர் வீடு கட்டும் திட்ட நிதி கேட்டு ஆர்ப்பாட்டம்

/

பிரதமர் வீடு கட்டும் திட்ட நிதி கேட்டு ஆர்ப்பாட்டம்

பிரதமர் வீடு கட்டும் திட்ட நிதி கேட்டு ஆர்ப்பாட்டம்

பிரதமர் வீடு கட்டும் திட்ட நிதி கேட்டு ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 08, 2025 05:07 AM

Google News

ADDED : நவ 08, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம், 4 ரோடு அருகே, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரிய அலுவலகம் முன், செல்வகணபதி மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில், மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், பிரதமர் வீடு கட்டும் திட்ட நிலுவை நிதியை விடுவிக்க கோரி, நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அறக்கட்டளை தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார்.

அதில், 2024ல் உத்தரவு பெற்ற பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய தொகை, 10 மாதங்களாக வழங்கப்படவில்லை. அதனால் வீடு கட்டுமானப்பணி பாதியில் நிற்பதால், இரு அரசுகளும் உடனே நிதியை வழங்கும்படி கோஷம் எழுப்பினர். இதுகுறித்து, கோட்ட நிர்வாக பொறியாளர் விஜயமோகனிடம் கேட்டபோது, ''வரிசைப்படி, பட்டியலை கருவூலத்துக்கு அனுப்பி, அவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us