ADDED : ஜூலை 16, 2026 01:24 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்: 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தில், அதிகாரிகள் நேரடி-யாக மக்கள் வசிக்கும் இடத்துக்கு சென்று, குறைகளை கேட்டு தீர்வு காணப்படுகிறது. அதன்படி சேலம் கலெக்டர் இளம் பகவத் நேற்று, மேச்சேரி, செம்மானுார் ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களை படிக்க சொல்லி, அவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை ஒட்டி, மாணவ, மாணவியருக்கு கற்றல்
உபகரணங்களை வழங்கினார்.
மாலையில், மேட்டூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கலெக்டர் தலை-மையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு துறை அலுவ-லர்கள், மக்கள் வழங்கிய கோரிக்கைகள் குறித்து பேசினர். டி.ஆர்.ஓ., ரவிக்குமார், ஆர்.டி.ஓ., சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
