/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வற்றிய கிணற்றில் நாய் குட்டிகள் மீட்பு
/
வற்றிய கிணற்றில் நாய் குட்டிகள் மீட்பு
ADDED : அக் 07, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், ஓமலுார் அருகே கோட்டமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மகாலட்சுமி, 32. இவரது வளர்ப்பு நாய் சில தினங்களுக்கு முன், அருகில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில், 6 குட்டிகளை ஈன்றது. அவைகள் நேற்று அங்குமிங்கும் ஊர்ந்த படி சத்தமிட்டது.
இதையறிந்த மகாலட்சுமி, ஓமலுார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த வீரர்கள் கிணற்றில் இறங்கி, நாய் குட்டிகளை மீட்டு, உரிமையாளிடம் ஒப்படைத்தனர்.