/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம கோவில் கும்பாபிேஷகம்
/
ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம கோவில் கும்பாபிேஷகம்
ADDED : செப் 01, 2025 02:07 AM
சேலம்;சேலம் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம கோவில் புனரமைக்கப்பட்டு அதன் கும்பாபிேஷக விழா, கடந்த, 29ல், மகா கணபதி யாகத்துடன் தொடங்கியது. இரு நாட்களாக பல்வேறு வித யாகங்கள், பூஜைகள் செய்யப்பட்டன.
நேற்று காலை, 5:00 மணிக்கு ராமகிருஷ்ணா மடத்தின் அகில உலக தலைவர் கவுதமானந்தஜி மகராஜ் தலைமையில் மங்கள ஆரத்தி, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து இரண்டு கால யாக வேள்விகள், மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்று, 9:45 மணிக்கு, புனித
நீர் கலசங்களை, சிவாச்சாரியார்கள் தலைமையில் சுமந்து, பல்வேறு மடங்களில் இருந்து வந்திருந்த துறவிகள் புடைசூழ, மேள தாளம் முழங்க கோவிலை வலம் வந்தனர். காலை, 10:18 மணிக்கு, கவுதமானந்தஜி மகராஜ் தலைமையில், சேலம் மடத்தின் செயலர் யதாத்மானந்தர் முன்னிலையில், கோபுர கலசம் மீது வேத மந்திரங்கள் ஒலிக்க, சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைத்தனர்.
தொடர்ந்து கோவிலில் உள்ள பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தரின் படங்களுக்கு புனிதநீர் தெளித்து சம்ரோஷனம், மகா தீபாராதனையுடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மதியம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், செவ்வாய்ப்பேட்டை பாண்டு
ரங்கநாதர் கோலாட்ட குழுவினரின் பக்தி பாடல்களுக்கு நடனம், ஆரத்தி நடனம், சென்னை விநாயகா நாட்டியாலயா மீனாட்சி ப்ரியா ராகவன் குழுவினரின் பரதநாட்டியம் நடந்தது. இன்று முதல், வரும், 11 வரை மண்டல பூஜை நடக்கிறது. இதில் தினமும் பல்வேறு இசை, நடன, நாட்டிய
நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.