sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆக்கிரமித்து கட்டிய தகர கொட்டகை அகற்றம்

/

ஆக்கிரமித்து கட்டிய தகர கொட்டகை அகற்றம்

ஆக்கிரமித்து கட்டிய தகர கொட்டகை அகற்றம்

ஆக்கிரமித்து கட்டிய தகர கொட்டகை அகற்றம்


ADDED : நவ 14, 2024 07:40 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர் - ஈரோடு நெடுஞ்சாலையில் உள்ள மாதையன்குட்டையில் இருந்து எலிகரடு செல்லும் சாலையோரம் மாரியம்மன் கோவில் உள்ளது. அதன் எதிரே சுப்ரமணியன், சுவாமிநாதன் வசிக்கின்றனர்.

சகோதரர்களான அவர்கள் இடையே நில பங்கீடு செய்வதில் தகராறு இருந்தது. இதனால் சுப்ரமணியன் ஆக்கிரமித்துள்ள, விநாயகர் சிலையுடன் கூடிய தகர கொட்டகையை அகற்ற, சுவாமிநாதன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது.

ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் சென்றபோது, சுப்ரமணியன் தரப்பினர் அவகாசம் கேட்டனர். இரு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் அகற்றிக்கொள்ளாத நிலையில் இரு மாதங்களுக்கு பின் நேற்று

காலை, நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர். அப்போது நீதிமன்றத்தில் மனு நிலுவையில் உள்ளதால் அகற்றக்கூடாது என, ஆக்கிரமிப்பாளர் தெரிவித்தார். ஆனால் மாலை வரை நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் காத்திருந்த நிலையில், அதுகுறித்த உத்தரவு

எதுவும் வரவில்லை. இதனால் கொட்டகையை சுற்றி வைத்திருந்த தகரங்களை, நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். தொடர்ந்து விநாயகர் சிலையை அங்கிருந்து அகற்றி ஆக்கிரமிப்பு முழுதையும் பொக்லைன் மூலம்

அகற்றினர்.






      Dinamalar
      Follow us