/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
/
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
ADDED : ஜன 06, 2025 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் ஒன்றியம், சேலம் மாவட்ட மையம் சார்பில், மாவட்ட மாநாடு, பொதுக்குழு, ஓய்வு பெற்ற அலு-வலர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.
அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்-டத்தை அமல்படுத்தல்; ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து பணி ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மாநில தலைவர் சக்திவேல், பொதுச்செயலர் அரவிந்தன், மாவட்ட ஆலோசகர் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

