/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிரிட்ஜினுள் இருந்த 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு மீட்பு
/
பிரிட்ஜினுள் இருந்த 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு மீட்பு
பிரிட்ஜினுள் இருந்த 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு மீட்பு
பிரிட்ஜினுள் இருந்த 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு மீட்பு
ADDED : அக் 01, 2024 07:14 AM
ஆத்துார்: ஆத்துார் அருகே, கொத்தாம்பாடி பகுதி யில், தனியாருக்கு சொந்-தமான கட்டுமான நிறுவனம் உள்ளது. இங்கு பணிபுரிபவர்க-ளுக்கு கேன்டீன் உள்ளது. கேன்டீன் தொழிலாளி சமையல் செய்-வதற்காக, பிரிட்ஜை திறந்தபோது, சத்தம் கேட்டதால் பார்த்-துள்ளார்.
அதில் நாகப்பாம்பு இருப்பதை கண்டு அச்சமடைந்தார். பின், ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலை-மையிலான வீரர்கள், ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், பிரிட்ஜ் பின் பகுதியில் பதுங்கியிருந்த ஐந்து அடி நீளமுள்ள நாகப்பாம்பை உயிருடன் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்ப-டைத்தனர்.
பீரோ அடியில்...கெங்கவல்லி அருகே, ஆணையாம்பட்டி புதுார் கிராமத்தை சேர்ந்-தவர், செந்தில்குமார், 50. இவரது வீட்டினுள் நேற்று, பாம்பு புகுந்-துள்ளதாக, கெங்கவல்லி வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். வீட்டினுள் சென்ற தீயணைப்பு வீரர்கள், பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பீரோவின் அடியில் நாக பாம்பு இருந்ததை கண்டறிந்தனர். அந்த பாம்பை பிடித்து, கெங்க-வல்லி தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர்.