ADDED : ஏப் 25, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்தலைவாசல், நல்லுாரை சேர்ந்தவர் நல்லசாமி, 50. கூலித்தொழிலாளியான இவர், நேற்று, ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். மதியம், 2:00 மணிக்கு, 75 அடி ஆழம், 10 அடி நீர் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.
2:20க்கு தகவல் கிடைத்து, 20 நிமிடத்தில் அங்கு வந்த, கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் விழுந்த நல்லசாமியை, வலை மூலம் வெளியே மீட்டனர்.