sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓய்வு பெற்ற துாய்மை பணியாளர்கள் ஓய்வூதிய பலன் கேட்டு சாலைமறியல்

/

ஓய்வு பெற்ற துாய்மை பணியாளர்கள் ஓய்வூதிய பலன் கேட்டு சாலைமறியல்

ஓய்வு பெற்ற துாய்மை பணியாளர்கள் ஓய்வூதிய பலன் கேட்டு சாலைமறியல்

ஓய்வு பெற்ற துாய்மை பணியாளர்கள் ஓய்வூதிய பலன் கேட்டு சாலைமறியல்


ADDED : அக் 14, 2025 07:17 AM

Google News

ADDED : அக் 14, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஓய்வு பெற்ற நகராட்சி துாய்மை பணியாளர்கள், ஓய்வூதிய பலன் கேட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆத்துார் நகராட்சியில், 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதில், நான்கு ஆண்டுகளுக்கு முன், ஓய்வு பெற்ற துாய்மை பணியாளர்களுக்கு, ஓய்வூதிய பலன் வழங்கவில்லை. இதுகுறித்து, நகராட்சி அலுவலகத்தில் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை, 5:50 மணியளவில் ஓய்வு பெற்ற துாய்மை பணியாளர்கள், ஓய்வூதிய பலன் வழங்கக்கோரி, நகராட்சி அலுவலகம் எதிரே, ராணிப்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்துார் டவுன் போலீசார், ஓய்வு துாய்மை பணியாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 'நகராட்சி அதிகாரிகளிடம் எடுத்துரைத்து, நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தனர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us