sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இரட்டிப்பு பணம் தருவதாக ரூ.200 கோடி மோசடி: உரிமையாளரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த மக்கள்

/

இரட்டிப்பு பணம் தருவதாக ரூ.200 கோடி மோசடி: உரிமையாளரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த மக்கள்

இரட்டிப்பு பணம் தருவதாக ரூ.200 கோடி மோசடி: உரிமையாளரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த மக்கள்

இரட்டிப்பு பணம் தருவதாக ரூ.200 கோடி மோசடி: உரிமையாளரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த மக்கள்

12


ADDED : மே 28, 2024 12:42 PM

Google News

ADDED : மே 28, 2024 12:42 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி நான்காயிரம் பேரிடம் ரூ.200 கோடி அளவிற்கு பணம் பெற்று மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. பணத்தை இழந்தவர்கள் உரிமையாளரை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் ஆலம்பாளையம் என் கடையூர் பகுதியை சேர்ந்த தீபக் திலக், பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு பி.டி.எம் குரூப் ஆப் கம்பெனி என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். சேலம், நாமக்கல், திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிளைகள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்து பொருட்கள் வாங்கினால் 20 மாதத்தில் முதலீடு செய்த பணத்திற்கு இரட்டிப்பாக பணம் தரப்படும் என கவர்ச்சிகரமான விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பிய சுமார் 4000 பேர் முதலீடு செய்தனர். அவர்களுக்கு முதல் மாதம் மட்டும் பணத்தை திருப்பி செலுத்தியுள்ளார், அதன் பின்னர் ஒரு வருடமாக பணத்தை வழங்காமல் ஏமாற்றியுள்ளார்.

இதனால் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பணத்தை இழந்த மக்கள் உரிமையாளர் தீபக் திலக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட்டத்திற்கு வர வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு சம்மதம் தெரிவித்த தீபக் திலக், சேலம் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பணத்தை திருப்பி கேட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு சரிவர பதிலளிக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தீபக் திலக்கை தாக்க முயன்றனர். இதனையடுத்து அவர் கூட்ட அரங்கை விட்டு ஓடி வந்து அரங்குக்கு முன்பாக இருந்த சாலையில் படுத்துக்கொண்டு, 'என்னை காப்பாற்றுங்கள்' எனக் கூச்சலிட்டுள்ளார். தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் படுத்திருந்த உரிமையாளர் தீபக் திலக்கை விசாரணைக்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர். அவர் சுமார் ரூ.200 கோடி அளவிற்கு மோசடி செய்ததாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us