/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செயில் ரீபேக்டரி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
/
செயில் ரீபேக்டரி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
செயில் ரீபேக்டரி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
செயில் ரீபேக்டரி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ADDED : ஜன 24, 2026 06:28 AM
சேலம்: சேலம் மாமாங்கம் பகுதியில், வெள்ளைக்கல் கனிமத்தை பயன்படுத்தி, ஸ்டீல் உருக்கா-லைக்கு தேவையான சுடுகற்களை உற்பத்தி செய்யும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன-மான செயில் ரீபேக்டரி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், 100க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிறுவனத்தில், 40 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற, 14 தொழிலாளர்களின் குடும்பத்-திற்கு வழங்கக்கூடிய பண பலன்களை வழங்-காமல் இழுத்தடிப்பு செய்து வருவதாகவும், இது குறித்து நிர்வாகத்திடம் கேட்டால், தங்களுக்கு தெரியாது, யாருக்கும் பணம் பலன் வழங்கமுடி-யாது என்று கூறுவதாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.மேலும் சம வேலைக்கு சம ஊதியம், மாதத்திற்கு 26 நாட்கள் வேலை வழங்க மறுப்பதை கண்-டித்தும், பணிச்சுமை மற்றும் நெறுக்கடியை கொடுக்கும் நிர்வாகத்தை கண்டித்தும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் போராட்-டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி ஒப்பந்த தொழிலாளர்கள், 145 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்துகின்-றனர்.

