ADDED : டிச 03, 2025 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், 'டிட்வா' புயலால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தபடி உள்ளது. இதனால் சென்னையில் இருந்து நேற்று மதியம், 3:20 மணிக்கு சேலம் வரக்கூடிய, 'இண்டிகோ' பயணியர் விமானம் கால தாமதம் ஏற்படும் என, முன்பதிவு செய்த பயணியருக்கு, காலையில் அறிவிப்பு செய்யப்பட்டு, மாலை, 5:20 மணிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் பயணியர் எதிர்பார்த்து, சேலம் விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால், 3:30 மணிக்கு விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படவே, பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

