ADDED : நவ 05, 2024 06:36 AM
சென்னை: சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள, சுதர்மா இல்லத்தில் தங்கி, விஜய யாத்திரை மேற்கொண்-டுள்ள சிருங்கேரி சன்னிதானம், எட்டாவது நாளாக நேற்று, பக்தர்-களுக்கு ஆசி வழங்கினார். நேற்று மாலை 6:00 மணிக்கு, ராஜ-கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மகாசுவாமி வித்யா மந்திர் பள்-ளிக்கு வருகை தந்த சிருங்கேரி சன்னிதானத்திற்கு, பள்ளி நிர்-வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் குழுமியிருந்த பக்தர்கள் மத்தியில், சன்னி-தானம் வழங்கிய அருளுரை: உலகிலேயே பாரத நாடு மிகச்சிறந்த நாடாக உள்ளது. பார-தத்தை விட செல்வச்செழிப்பான, பரப்பளவில் பெரிய, பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய நாடுகள் பல உள்ளன. ஆனால், இவையெல்லாம் நம் உடல் இருக்கும்வரைதான் பயன்-படும். நாம் இந்த உடலை விட வேண்டி வரும்போது பணம், செல்வத்தை உடன் கொண்டுபோக முடியாது. கல்வி அவசியம். ஆனால், பாரத நாட்டில் மட்டுமே இருக்கும் தர்மம் என்பது, இருக்கும்போது பயன்படும்; இறந்த பிறகும் நம்மோடு வரும். உடலை விட்டு மேல் உலகம் செல்லும்போது, இவர் எவ்வளவு செல்வம் சேர்த்தார் என்று கேட்க மாட்டார்கள்; எவ்வளவு தர்மம் செய்தார் என்ற கேட்டு, அதன் அடிப்படையில்தான் அவருக்கான இடம் நிர்ணயிக்கப்படும். அதனால்தான், நம் நாட்டில் சனாதன வைதீக தர்மம் பாரதத்தில் முக்கியமானதாக உள்ளது.சனாதன வைதீக தர்மத்தை தான் இப்போது ஹிந்து தர்மம் என்கி-றார்கள். சனாதன வைதீக தர்மம் என்று சொல்வதே சரியானது. உலகிற்கு ஆதாரமாக இருப்பது தர்மம்தான். சனாதனம் என்றால் ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை என்று பொருள். ஹிந்து தர்மம் 'சனாதன தர்மத்திற்கு அழிவே இல்லை. சனாதன தர்மத்-திற்கு அழிவு வந்தால், நானே அவதாரம் செய்து காப்பாற்று வேன்' என்று, பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறியிருக்கிறார். மனிதர்களால் சனாதன தர்மத்தை காப்பாற்ற முடியாவிட்-டால்தான், கடவுள் காப்பாற்ற வருவார். சனாதன தர்மத்திற்கு ஆதாரம் வேதங்கள். அதனால்தான் சனாதன வைதீக தர்மம் என்-கிறோம். இந்த சொற்களில் அதன் முழுமையான பொருள் வந்து விடுகிறது. அதைத்தான் இப்போது ஹிந்து தர்மம் என்கிறோம். இவ்வாறு அருளுரை வழங்கினார்.