ADDED : ஜூன் 28, 2026 03:00 AM
அ நிறம் | அளவு
சேலம்; சேலம், வாய்க்கால்பட்டறையை சேர்ந்த அனு-ஸ்ரீயாவின் மகன் பிரனீஷ், 11. அங்குள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், துாண்டிலுடன் மீன்பிடிக்க சென்ற அவன், வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகார்படி வீராணம் போலீசார் விசா-ரித்ததில், மன்னார்பாளையம், டாஸ்மாக் கடை பின்
புறமுள்ள பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்தி-ருக்கலாம் என சந்தேகித்தனர்.
தொடர்ந்து நேற்று, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு படையினர், மக்கள் உதவியுடன், கிணற்றில் தேடியதில் சிறுவன் உடல் கிடைத்து மீட்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
