ADDED : செப் 24, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த, பேளூர் வாரச்சந்தையில் நேற்று ஆடு விற்-பனை நடந்தது. சேலம், வெள்ளிமலை, கருமந்துறை, கள்ளக்கு-றிச்சி, தருமபுரி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு துவங்கிய வாரச்சந்தைக்கு, 1,100 ஆடுகள் வரை விற்பனைக்கு வந்தன. 10 கிலோ எடை கொண்ட ஒரு கிடா ஆடு, 4,000 முதல், 4,500 ரூபாய் வரை விலை போனது. 10 கிலோ எடை
கொண்ட பெண் ஆடு, 3,500 முதல், 4,500 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடைபெற்ற சந்-தையில், 12 லட்சத்துக்கு மட்டுமே ஆடுகள் விற்பனை நடைபெற்-றது.