தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/இ - சேவை மையங்களில் 'சர்வர்' பிரச்னை நகர் பகுதியில் அரசு சேவை பெறுவதில் சிக்கல்

இ - சேவை மையங்களில் 'சர்வர்' பிரச்னை நகர் பகுதியில் அரசு சேவை பெறுவதில் சிக்கல்

இ - சேவை மையங்களில் 'சர்வர்' பிரச்னை நகர் பகுதியில் அரசு சேவை பெறுவதில் சிக்கல்


ADDED : ஆக 06, 2026 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2026 01:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: தமிழ்நாடு அரசு டேக் டிவி கட்டுப்பாடில் கலெக்டர் அலுவ-லகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி உள்பட உள்-ளாட்சி அலுவலகங்களில் இயங்குபவை, அரசின் இ - சேவை மையங்களாகவும், மற்ற இடங்களில் தனியார் இ - சேவை மையங்களாகவும் செயல்படுகின்றன.

அங்கு அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த, 100க்கும் மேற்-பட்ட சேவைகளை ஒருங்கே பெறலாம். உரிய ஆவணங்களுடன், அதற்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்தால் தேவையான சேவைகள் கிடைக்கும்.சமீப காலமாக, சேலத்தில் தனியார் இ - சேவை மையங்களில், 'சர்வர்' மக்கர் செய்வதால், விரைவான சேவை என்பது கேள்விக்-குறியாகி வருகிறது. அதனால் தாமதமான சேவைகளால் பாதிக்கப்-படுவதாக பயனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, நில ஆவணங்கள் தொடர்பான சேவை கிடைப்பது பெரும்பாடாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பட்டா பெயர் மாற்றம், தனிப்பட்டா, புல எல்லை அளவிடுதல் போன்ற சேவைகள் கிடைப்பதில்லை என கூறுகின்றனர்.

இப்பிரச்னை நகர்புற பகுதிகளில் மட்டும் நீடித்து வருவதாக, தனியார் இ - சேவை மையத்தினர் தெரிவிக்கின்றனர். இதனால், இ - சேவை மையத்துக்கு வருவோர், சேவை கிடைக்காத பட்-சத்தில், அதிருப்தியுடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது.

மேலும் தனியார் இ - சேவை மையத்தினர் கூறுகையில், 'தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, உடனே சர்வர் திறனை மேம்-படுத்தி தர வேண்டும். இல்லையெனில் அரசின் சேவையில் குறைபாடு பெருகுவதை தவிர்க்க முடியாது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us