நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, கெங்கவல்லி பகுதி மாற்றுத்திறனாளிகள் நேற்று, அங்குள்ள ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, ஒன்றியத்தில் உள்ள சில ஊராட்சிகளில், தேசிய ஊரக வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்காமல், 7 வாரங்களாக நிலுவைத்தொகையும் வழங்காமல் அலைக்கழிப்பதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பி.டி.ஓ., சந்திரசேகரன், பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், அனைவரும் கலைந்து சென்றனர்.