ADDED : நவ 10, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாம்பு தீண்டி ஒயர்மேன் 'அட்மிட்'
கெங்கவல்லி, நவ. 10-
கெங்கவல்லி அருகே தெடாவூர் துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணி நேற்று நடந்தது. அதையொட்டி மின்வாரிய பணியாளர்கள், கெங்கவல்லியில் மின் கம்ப பகுதியில் இருந்த முட்புதரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஒயர்மேன் கருப்பண்ணன், முட்புதரை சுத்தம் செய்தபோது பாம்பு தீண்டியுள்ளது. படுகாயம் அடைந்த அவரை, மின்பணியாளர்கள் மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.