/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு ரயில் அறிவிப்பு
/
ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு ரயில் அறிவிப்பு
ADDED : மார் 21, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பயணியர் கூட்ட நெரிசலை குறைக்க, சென்னை சென்ட்ரல் - போத்தனுார் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில், வரும், 30ம் தேதி இரவு, 11:20க்கு புறப்பட்டு, பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே மறுநாள் காலை, 8:00 மணிக்கு, போத்தனுாரை அடையும். மறுமார்க்க ரயில், வரும் 31ம் தேதி இரவு, 11:20க்கு கிளம்பி, அடுத்தநாள் காலை, 8:20க்கு சென்னையை அடையும்.