ADDED : பிப் 21, 2026 09:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: ரயில் பயணியரின் நெரிசலை தவிர்க்க, டாடா நகர்(ஜார்க்கண்ட்) - எர்ணாகுளம் சிறப்பு ரயில் நாளை மதியம், 2:30 மணிக்கு புறப்பட்டு, 24 காலை, 9:30 மணிக்கு எர்ணாகுளத்தை அடையும். 23 நள்ளிரவு, 12:37க்கு சேலம், 1:35க்கு ஈரோடு, 2:28க்கு திருப்பூர், அதிகாலை, 5:03க்கு போத்தனுார் ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.மறுமார்க்க ரயில், 24 இரவு, 11:50க்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டு, 26 இரவு, 8:30 மணிக்கு, டாடா நகரை அடையும்.
இந்த ரயில், 25 அதிகாலை, 4:30க்கு போத்தனுார், 5:23க்கு திருப்பூர், 6:10க்கு ஈரோடு, 7:12க்கு சேலத்தில் நின்று செல்லும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

